110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி,
பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை
இன்று சட்டசபையில் வெளியிட்டார்.
* பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.
* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில்
தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.
* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில்
கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு
* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த
ரூ.39 கோடி ஒதுக்கீடு
* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள்,
3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.
* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.
* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,
வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.
பிற துறை அறிவிப்புக்கள் :
* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது
உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன்
ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
No comments:
Post a Comment